search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crashes"

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் எப்-16 ரக போர் விமானம் கட்டிடத்துக்குள் பாய்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மார்ச் ஏர் ரிசர்வ் பேஸ் விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான எப்-16 ரக போர் விமானம் நேற்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.

    பிற்பகல் 3.45 மணியளவில் வேன் புரேன் பவுலேவார்ட் நகரத்தின்மீது பறந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் மீது மோதி ஒரு பண்டகச்சாலைக்குள் (கிடங்கு) பாய்ந்தது. இந்த விபத்தில் கிடங்கின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது.



    சமயோசிதமாக பாரசூட் மூலம் கீழே குதித்த விமானி மற்றும் இவ்விபத்தில் காயமடைந்த மேலும் 5 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில், பைலட் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். #IAF-AircraftCrashes
    கோரக்பூர்:

    உத்தர பிரதேச மாநிலம் குஷி நகர் மாவட்டம், கோரக்பூரில் இந்திய விமானப்படை வீரர்கள் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதில், கோரக்பூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஜாகுவார் போர் விமானம், சிறிது நேரத்தில் ஹதேம்ர் பகுதியில் விபத்துக்குள்ளானது. தரையில் மோதியதும் விமானம் தீப்பிடித்தது.



    ஆனால், விமானம் தரையில் விழுந்தவுடன், விமானி சாமர்த்தியமாக வெளியே குதித்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #IAF-AircraftCrashes
    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், சாமானிய பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? என்பதை பார்க்கலாம். #RupeeInICU #IndianRupee
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இது தவிர இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரும் சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

    இதன் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது.

    ஜூன் 19-ஆம் தேதி அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.61 என்ற அளவிற்கு சரிந்திருந்தது. இது அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக கருதப்பட்டது. அதன்பின்னர் சிறிது ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு நேற்றைய வர்த்தக நேர முடிவில் 68.61 ஆக நிலைபெற்றது. 

    ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கி, அந்த நாட்டை தனிமைப்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதன் தொடக்கமாக, கூட்டணி நாடுகள் அனைத்தும் ஈரானிடம் இருந்து நவம்பர் மாதத்திற்குப் பிறகு கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று கூறியிருந்தது. 

    இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது என்றும், இதை மீறினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டது.

    இதுபோன்ற காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடுமையாக சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின்போது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து 68.89 ஆக இருந்தது. அதன்பின்னர் சிறிது நேரத்திலேயே மேலும் சரிந்து 69.10 என்ற நிலையை எட்டியது. இது வரலாறு காணாத சரிவு ஆகும். 

    இந்த நிலை மேலும் மோசமடையலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் 70 ரூபாயை தொடலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரூபாய் மதிப்பு சரிவால் சாமானியர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை ஏற்படலாம் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் இறக்குமதி குறைந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது, இறக்குமதி பொருட்களின் மீதான வரியை உயர்த்தும் நடவடிக்கையை நோக்கி அரசை தள்ளும். மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, கடந்த மே மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 1,460 கோடி டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டில், இதே மாதத்தில் இருந்ததை விட 5.6 சதவீதம் அதிகம். 



    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இறக்குமதி செலவு அதிகரிக்கும். அதனால் பெட்ரோல்,  டீசலின் விலை அதிகரிக்கும். இது சாமானியர்களை வெகுவாக பாதிக்கும். 

    ஏற்கனவே, பெட்ரோல் விலை உயர்வால் கடும் சுமையை தாங்கிக்கொண்டிருக்கும் மக்களின் தலையில் மேலும் இடியாக இது இருக்கும். விலையை குறைத்தால் கடும் நிதிசுமையை ஏற்க வேண்டியிருக்கும் என்பதால், பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்க வாய்ப்புகள் குறைவு. 

    எரிபொருள் விலை உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணியாக அமையும். இதனால், ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளில் தேக்கம் ஏற்படும். இது பணவீக்கம் அதிகரிக்க காரணமாகவும் இருக்கும். பணவீக்கம் அதிகரித்ததால் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது.

    மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு ரூபாய் மதிப்பை உயர்த்தும் வழிகளை செய்தால்தான், பொதுமக்கள் தீவிர சுமைக்கு உள்ளாவதை தடுக்க முடியும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
    குஜராத் மாநிலம் சோட்டாதேபூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலையோர வீட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். #truckaccident
    காந்திநகர்:

    குஜராத் மாநிலம் சோட்டாதேபூர் மாவட்டத்தில் உள்ள மாண்ட்வல் கிராமம் மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் பகுதி ஆகும். இன்று அதிகாலை 5 மணியளவில் அவ்வழியே சென்ற சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து திடீரென அங்குள்ள வீட்டில் புகுந்தது.

    வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த, சந்தோஷ் ரத்வா, அவரது மனைவி கைலாஷ் மற்றும் அவர்களது 9 மாத குழந்தை அவினாஷ் ஆகிய 3 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் வாகனத்தை அடித்து நொறுக்கியதாகவும், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமேதி தெரிவித்துள்ளார்.

    மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஓட்டுனரை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #truckaccident
    ×