செய்திகள்

தூக்கத்தில் இருந்த 11 வயது சிறுமியை தூக்கிச் சென்று கற்பழித்தவன் கைது

Published On 2018-05-20 11:35 GMT   |   Update On 2018-05-20 11:35 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் தூங்கிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை தூக்கிச் சென்று கற்பழித்த 52 வயது காமுகனை போலீசார் கைது செய்தனர்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்திற்குட்பட்ட மும்ப்ரா பகுதியில் உள்ள போலேநாத் நகரை சேர்ந்தவன் மஹாடூ வாக்(52). மாநில அரசின் வனத்துறையில் தற்காலிக பணியாளராக வேலை செய்துவந்த இவன், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அருகாமையில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்துகொண்டு உள்ளே நுழைந்தான்.

வீட்டினுள் அயர்ந்து உறங்கி கொண்டிருந்த 11 வயது சிறுமியின் வாயைப்பொத்தி, அங்கிருந்த தூக்கிச் சென்ற அந்த காமுகன் அருகாமையில் ஒதுக்குப்புறமாக உள்ள மலையடிவாரத்தில் அந்த சிறுமியை கற்பழித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளியை கைது செய்த போலீசார் பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News