செய்திகள்

தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு - 740 பேர் துடைப்பத்துடன் நடனமாடி சாதனை

Published On 2018-05-11 07:23 GMT   |   Update On 2018-05-11 07:23 GMT
குஜராத் மாநிலத்தில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 740 பேர் துடைப்பத்துடன் நடனமாடி சாதனைப் படைத்துள்ளனர். #SwachhBharat
அகமதாபாத்:

நாட்டில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை பேணும் வகையில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு கழிப்பிட வசதிகளை மேம்படுத்தி சுகாதாரத்தை பேணுவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.



இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 740 பேர் துடைப்பத்துடன் ஒரே இடத்தில் நடமாடினர். இது சாதனையாக கருதப்படுகிறது. #SwachhBharat

Tags:    

Similar News