செய்திகள்
பீகாரில் துணிகரம் - பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் சுட்டுக்கொலை
பீகார் மாநிலத்தில் பட்டப்பகலில் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியரை சுட்டுக் கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில் பகவான்பூர் பகுதியில் உள்ளது எல்.என் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளிக்கு நேற்று அடையாளம் தெரியாத இருவர் பைக்கில் வந்தனர்.
பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ராதேஷ் ரஞ்சன் (35) என்பவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரி சுட்டனர். இதையடுத்து, அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் ராதேஷ் ரஞ்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் ஆசிரியரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகாரில் பட்டப்பகலில் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியரை சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #Tamilnews