செய்திகள்
காஷ்மீர் - பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஆளுங்கட்சி தலைவர் பலி
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆளுங்கட்சி தலைவர் குலாம் நபி பரிதாபமாக உயிரிழந்தார். #kashmir #Pulwamaattack #GhulamNabiPatel
காஷ்மீர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராஜ்போரா சவுக் பகுதியில் இன்று பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஆளுங்கட்சி தலைவர் குலாம் நபி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குலாம் நபி பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த இரண்டு போலீசாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீரில் பட்டபகலில் ஆளுங்கட்சி தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #kashmir #Pulwamaattack #GhulamNabiPatel
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராஜ்போரா சவுக் பகுதியில் இன்று பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஆளுங்கட்சி தலைவர் குலாம் நபி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குலாம் நபி பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த இரண்டு போலீசாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீரில் பட்டபகலில் ஆளுங்கட்சி தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #kashmir #Pulwamaattack #GhulamNabiPatel