செய்திகள்
பள்ளியின் மதிய உணவு சமையல் பாத்திரங்கள் கழிவறையில் வைக்கப்படும் அவலம்
மத்திய பிரதேசத்தில் பள்ளியில் மதிய உணவுக்கான உபகரணங்கள் பள்ளி கழிவறையில் வைத்து பாதுகாக்கப்படுவது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. #MiddayMeal
டமோ:
மத்திய பிரதேச மாநிலம் டமோ பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் கழிவறை முன் மாணவர்களுக்கான மதிய உணவு தயார் செய்யப்படுகிறது. பொருட்களை வைப்பதற்கு தனியாக அறை இல்லாததால், சமையல் செய்த பின் உபகரணங்கள் அனைத்தும் பள்ளியின் கழிவறையிலேயே வைக்கப்படுகிறது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறும்போது, மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ள சுய உதவி குழுக்கள் மீது குற்றம்சாட்டுகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கோபால் பார்கவ் கூறியுள்ளார். #MiddayMeal
மத்திய பிரதேச மாநிலம் டமோ பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் கழிவறை முன் மாணவர்களுக்கான மதிய உணவு தயார் செய்யப்படுகிறது. பொருட்களை வைப்பதற்கு தனியாக அறை இல்லாததால், சமையல் செய்த பின் உபகரணங்கள் அனைத்தும் பள்ளியின் கழிவறையிலேயே வைக்கப்படுகிறது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறும்போது, மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ள சுய உதவி குழுக்கள் மீது குற்றம்சாட்டுகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கோபால் பார்கவ் கூறியுள்ளார். #MiddayMeal