செய்திகள்

சிறார் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்க ஆபாச இணையதளங்களே காரணம் - ம.பி. மந்திரி கடிதம்

Published On 2018-04-24 20:44 GMT   |   Update On 2018-04-24 20:44 GMT
சிறார் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்க ஆபாச இணையதளங்களே காரணம் என ம.பி. உள்துறை மந்திரி பூபேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
போபால்:

மத்தியப்பிரதேச மாநில உள்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் பூபேந்திர சிங். இவர் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

காஷ்மீர், ம.பி., - உ.பி., உள்பட பல இடங்களில் சிறுமியர் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இதுபோன்ற சிறார் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்க ஆபாச இணையதளங்களே முக்கிய காரணமாக உள்ளது. எனவே, மத்தியப்பிரதேச அரசு ஆபாச படங்களின் இணையதளங்களை முடக்குவதை பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்து விரைவில் மத்திய அரசை அணுகுவோம். ஆபாச இணையதளங்கள், சினிமாக்களை தடை செய்ய மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசு 25-க்கும் மேற்பட்ட ஆபாசபட இணையதளங்களை முடக்கியுள்ளது. ஆனால் இது போதாது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தூரில் கடந்த 19-ம் தேதி சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ம.பி. அரசு இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
Tags:    

Similar News