செய்திகள்

டெல்லியில் திடீரென வீசிய புழுதிப்புயல் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

Published On 2018-04-06 12:46 GMT   |   Update On 2018-04-06 12:46 GMT
தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை திடீரென வானிலை மாறி புழுதிப்புயல் வீசத்தொடங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். #Delhi
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியின் அக்பர் சாலை, ராஜேஷ்ந்திர பிரசாத் மார்க், ஆர்.கே புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மாலை வானிலை திடீரென மாறத்தொடங்கியது. கரும் இருள் எங்கும் சூழ்ந்தவாரு இருந்த நிலையில், வேகமான காற்றுடன் புழுதிப்புயல் வீசத்தொடங்கியது.


இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். ஏற்கனவே, காற்று மாசுபாட்டில் சிக்கித்தவிக்கும் டெல்லியில் புழுதிப்புயல் வீசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Delhi #TamilNews
Tags:    

Similar News