செய்திகள்
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு முன்ஜாமீன் வழங்கியது சி.பி.ஐ கோர்ட்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு டெல்லி சி.பி.ஐ கோர்ட் இன்று முன்ஜாமீன் வழங்கியது. #KartiChidambaram
புதுடெல்லி:
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பறிமாற்றம் நடந்துள்ளதாக கூறி கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதே வழக்கில், அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி அமலாக்கத்துறையால் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
14 நாட்கள் விசாரணைக்காவலில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. இதே வழக்கில் சி.பி.ஐ அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனால் எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் தனக்கு முன்ஜாமீன் கோரி டெல்லி சி.பி.ஐ சிறப்பு கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை இன்று விசாரித்த நீதிபதி நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். #KartiChidambaram #TamilNews
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பறிமாற்றம் நடந்துள்ளதாக கூறி கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதே வழக்கில், அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி அமலாக்கத்துறையால் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
14 நாட்கள் விசாரணைக்காவலில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. இதே வழக்கில் சி.பி.ஐ அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனால் எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் தனக்கு முன்ஜாமீன் கோரி டெல்லி சி.பி.ஐ சிறப்பு கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை இன்று விசாரித்த நீதிபதி நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். #KartiChidambaram #TamilNews