செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கைது

Published On 2018-03-20 12:58 GMT   |   Update On 2018-03-20 12:58 GMT
டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் பேராசிரியர் அடுல் ஜோஹ்ரி-ஐ இன்று போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
புதுடெல்லி:

டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வாழ்க்கை அறிவியல் கல்லூரி பேராசிரியர் அடுல் ஜோஹ்ரி என்பவர் மீது மாணவியர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்தனர். இதுதொடர்பாக வசந்த் கஞ்ச் காவல் நிலையத்தில்  பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், வாழ்க்கை அறிவியல் கல்வித்துறை மாணவ-மாணவியர்கள் கடந்த 16-ம் தேதி கும்பலாக திரண்டு கடந்த கல்லூரி டீன் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். விசாரணையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இது குறித்து டீனிடம் கடிதம் கொடுத்தனர்.



இதே கோரிக்கையை வலியுறுத்தி வசந்த் கஞ்ச் போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்ட மாணவ-மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்களும் இன்று போலீஸ் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், பேராசிரியர் அடுல் ஜோஹ்ரி-ஐ இன்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியதாக டெல்லி நகர போலீஸ் இணை கமிஷனர் அஜய் சவுத்ரி தெரிவித்துள்ளார். #tamilnews
Tags:    

Similar News