செய்திகள்
தொடரும் கவுரவ கொலை- பிள்ளைகளை படிக்க வைக்க வேலைக்கு சென்ற குடும்பத்தலைவி படுகொலை
வேலைக்கு சென்றதன் மூலம் ராஜப்புத்திர வம்சத்தின் பெருமையை சீர்குலைத்ததாக இரண்டு குழந்தைகளின் தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #rajasthan
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகேஷ். இவரது மனைவி உஷா தேவி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான உஷா, கணவர் வேலைக்கு சென்ற போதிலும் குழந்தைகளின் கல்விக்காக அருகாமையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இதன் மூலம் உஷா மாதம் 7 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தார்.
உஷா வேலைக்கு போவது ராஜப்புத்திர வம்சத்தின் பெருமையை சீர்க்குலைப்பது என முகேஷின் உறவினர் மம்ராஜ் சிங் எண்ணினார். இதனால் கடந்த 15-ம் தேதி காலை வேலைக்கு சென்று கொண்டிருந்த உஷாவை நடுரோட்டில் வாளால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த உஷா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த மம்ராஜ் சிங்கை கடந்த 16-ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நாட்டின் பல இடங்களில் கவுரவக் கொலைகள் அரங்கேறி வரும் நிலையில், வேலைக்கு போன காரணத்திற்காக பெண் நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #rajasthan #tamilnews
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகேஷ். இவரது மனைவி உஷா தேவி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான உஷா, கணவர் வேலைக்கு சென்ற போதிலும் குழந்தைகளின் கல்விக்காக அருகாமையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இதன் மூலம் உஷா மாதம் 7 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தார்.
உஷா வேலைக்கு போவது ராஜப்புத்திர வம்சத்தின் பெருமையை சீர்க்குலைப்பது என முகேஷின் உறவினர் மம்ராஜ் சிங் எண்ணினார். இதனால் கடந்த 15-ம் தேதி காலை வேலைக்கு சென்று கொண்டிருந்த உஷாவை நடுரோட்டில் வாளால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த உஷா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த மம்ராஜ் சிங்கை கடந்த 16-ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நாட்டின் பல இடங்களில் கவுரவக் கொலைகள் அரங்கேறி வரும் நிலையில், வேலைக்கு போன காரணத்திற்காக பெண் நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #rajasthan #tamilnews