செய்திகள்

கனடா பிரதமர் ஜஸ்டின் குடும்பத்தினருடன் கிரிக்கெட் விளையாடிய கபில்தேவ், அசாருதின்

Published On 2018-02-22 21:09 GMT   |   Update On 2018-02-22 21:09 GMT
இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கபில்தேவ் மற்றும் அசாருதின் ஆகியோர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குடும்பத்தினருடன் டெல்லி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி மகிழந்தனர். #JustinTrudeau
புதுடெல்லி:

இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கபில்தேவ் மற்றும் அசாருதின் ஆகியோர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குடும்பத்தினருடன் டெல்லி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி மகிழந்தனர்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். அதன்பின், குஜராத் சென்ற அவர் காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார்.



இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கபில்தேவ் மற்றும் அசாருதின் ஆகியோர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குடும்பத்தினருடன் டெல்லி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி மகிழந்தனர்.

இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் குடும்பத்தினர், நேற்று ஜும்மா மசூதிக்கு சென்று பார்வையிட்டனர். அதன்பின்னர் அவர்கள், டெல்லி மைதானத்தில் முன்னாள் வீரர்கள் கபில்தேவ் மற்றும் அசாருதின் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடினர்.

கபில்தேவ் பந்து வீச, அசாருதின் மற்றும் பலர் பீல்டிங் செய்தனர். அவர்களுடன் ஜஸ்டின் ட்ருடோவின் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். #JustinTrudeau #tamilnews
Tags:    

Similar News