செய்திகள்

அமிர்தசரஸ் பொற்கோவிலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் வழிபாடு

Published On 2018-02-21 08:05 GMT   |   Update On 2018-02-21 08:05 GMT
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலில் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார். #JustinTrudeau
சண்டிகர்:

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். பின்னர், குஜராத் சென்ற அவர் காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில், இன்று பஞ்சாப் மாநிலம் சண்டிகர் வந்தடைந்த அவர் அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்கை சந்தித்து பேசினார். இதனை அடுத்து, அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்தினருடன் சென்றார். 



அங்கு சிறப்பு வழிபாடு நடத்திய அவர் பின்னர் உணவு தயாராகும் இடத்திற்கு சென்று சப்பாத்தி செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
#JustinTrudeau #TamilNews
Tags:    

Similar News