செய்திகள்

தெலுங்கானாவில் இரண்டு கார் நேருக்குநேர் மோதி விபத்து - ஏழு பேர் பலி

Published On 2018-02-21 05:28 GMT   |   Update On 2018-02-21 05:28 GMT
தெலுங்கானா மாநிலம் கானிமெட்டா என்ற இடத்தின் அருகே இன்று காலை இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் வானபார்தி மாவட்டத்தில் உள்ள கானிமெட்டா என்ற இடத்தில் இன்று காலை ஐதாராபாத்தில் இருந்து வந்த ஒரு காரும், எதிர்புறம் வந்த இன்னொரு காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும், காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்கான அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News