செய்திகள்
கர்நாடக சட்டசபை தேர்தல்: ராகுல்காந்தி புதிய வியூகம்
கர்நாடகா மாநில காங்கிரசார், ‘‘மை கர்நாடகா’’ எனும் புதிய கோஷத்தை எழுப்ப தொடங்கியுள்ளனர். இந்த தலைப்பில் இளைஞர்கள் பங்கேற்கும் கூட்டங்களை காங்கிரஸ் நடத்த தொடங்கியுள்ளது.
பெங்களூர்:
கர்நாடக மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
மூன்று கட்சிகளும் ஏற்கனவே தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் இளம் வாக்காளர்களை கவர வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாகி உள்ளது. இதற்கான புதிய வியூகம் ஒன்றை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வகுத்து கொடுத்துள்ளார்.
அதன்படி கர்நாடகா மாநில காங்கிரசார், ‘‘மை கர்நாடகா’’ எனும் புதிய கோஷத்தை எழுப்ப தொடங்கியுள்ளனர். இந்த தலைப்பில் இளைஞர்கள் பங்கேற்கும் கூட்டங்களை காங்கிரஸ் நடத்த தொடங்கியுள்ளது.
குறிப்பாக 17 வயது முதல் 27 வயது வரையுள்ள இளைஞர்கள், இளம் பெண்களுக்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த வயதில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள்.
அவர்களில் 500 மாணவர்களை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது. இந்த மாணவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் இன்று பெங்களூரில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் ‘‘மை கர்நாடகா’’ கோஷத்தை மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல அறிவுறுத்தப்படும்.
காங்கிரஸ் மேலிட தலைவர்கள் 10 பேர் இந்த 500 மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர். ராகுலின் இந்த திட்டம் மூலம் இளைஞர்களை காங்கிரஸ் கட்சி சார்பாக முழுமையாக கவர வலை விரிக்கப்பட்டுள்ளது. #Tamilnews
கர்நாடக மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
மூன்று கட்சிகளும் ஏற்கனவே தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் இளம் வாக்காளர்களை கவர வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாகி உள்ளது. இதற்கான புதிய வியூகம் ஒன்றை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வகுத்து கொடுத்துள்ளார்.
அதன்படி கர்நாடகா மாநில காங்கிரசார், ‘‘மை கர்நாடகா’’ எனும் புதிய கோஷத்தை எழுப்ப தொடங்கியுள்ளனர். இந்த தலைப்பில் இளைஞர்கள் பங்கேற்கும் கூட்டங்களை காங்கிரஸ் நடத்த தொடங்கியுள்ளது.
குறிப்பாக 17 வயது முதல் 27 வயது வரையுள்ள இளைஞர்கள், இளம் பெண்களுக்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த வயதில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள்.
அவர்களில் 500 மாணவர்களை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது. இந்த மாணவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் இன்று பெங்களூரில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் ‘‘மை கர்நாடகா’’ கோஷத்தை மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல அறிவுறுத்தப்படும்.
காங்கிரஸ் மேலிட தலைவர்கள் 10 பேர் இந்த 500 மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர். ராகுலின் இந்த திட்டம் மூலம் இளைஞர்களை காங்கிரஸ் கட்சி சார்பாக முழுமையாக கவர வலை விரிக்கப்பட்டுள்ளது. #Tamilnews