செய்திகள்

டெல்லியில் ஜனாதிபதியுடன் ராகுல் காந்தி சந்திப்பு

Published On 2018-01-28 01:19 GMT   |   Update On 2018-01-28 01:19 GMT
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். #RahulGandhi #PresidentKovind
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஜனாதிபதி மாளிகை தனது ‘டுவிட்டர்’ தளத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது. எனினும் இது குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் அதில் வெளியிடப்படவில்லை.

முன்னதாக மியான்மர் நாட்டு தலைவர் ஆங்சான் சூகியும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது சூகிக்கு பிடித்தமான ரோஜாக்களை கொடுத்து அவரை ஜனாதிபதி வரவேற்றார். இதைப்போல கம்போடிய பிரதமர் ஹுன் சென்னும் மரியாதை நிமித்தமாக ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.

இதற்கிடையே குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற பழங்குடியின விருந்தினர்கள், அணிவகுப்பு ஊர்தி கலைஞர்கள், தேசிய மாணவர் படை தன்னார்வலர்கள், என்.சி.சி. தொண்டர்கள் மற்றும் அதிகாரிகளும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  #RahulGandhi #PresidentKovind
Tags:    

Similar News