செய்திகள்
ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - மேலும் ஒரு இந்திய வீரர் வீரமரணம்
ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய அத்துமீறிய தாக்குதலில், மேலும் ஒரு இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களை ஒட்டியுள்ள எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக பீரங்கி தாக்குதலிலும் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ஒரு பெண் உள்பட 2 பொதுமக்கள் பலியானார்கள். சார்குர்தா என்ற இடத்தில் பெண்ணும், ஆர்.எஸ்.புராவின் கோரோ தோனா என்ற இடத்தில் ஒருவரும் பலியானார்கள்.
இந்திய எல்லை பாதுகாப்பு படையின் நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய தரப்பிலும் எல்லை பாதுகாப்பு படையினரால் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
சம்பா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் ஜக்பால் சிங் வீர மரணம் அடைந்தார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் தாக்குதலால் இந்திய எல்லை பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. #tamilnews