செய்திகள்

தலாய் லாமாவுடன் பீகார் முதல் மந்திரி சந்திப்பு

Published On 2018-01-16 16:15 GMT   |   Update On 2018-01-16 16:15 GMT
பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று புத்த மதத்தலைவர் தலாய் லாமாவை சந்தித்து ஆசி பெற்றார்.
பாட்னா:

நாடு கடந்த திபெத்திய மக்கள் அரசின் தலைவரும் புத்த மதத்தலைருமான தலாய் லாமா, பீகார் மாநிலத்தில் உள்ள புத்த கயா மாவட்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தபிரான் ஞானப்பேற்றினை அடைந்த போதி மடத்தில் ஜனவரி முதல் தேதியில் இருந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், இன்று போதி கயா மடத்துக்கு வந்த பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலாய் லாமாவை சந்தித்து அம்மாநில மக்களின் நல்வாழ்வுக்காக ஆசி பெற்றார்.

அவரை அன்புடன் வரவேற்ற தலாய் லாமா புத்தர் படம் மற்றும் அங்கவஸ்திரத்தை அன்பளிப்பாக அளித்து ஆசீர்வதித்தார். சுமார் ஒருமணி நேரம் தலாய் லாமாவுடன் தங்கியிருந்த நிதிஷ் குமார் அவரிடம் விடைபெற்று சென்றார். #tamilnews
Tags:    

Similar News