செய்திகள்

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.11 கோடி தங்கம் பிடிபட்டது

Published On 2017-12-22 15:18 GMT   |   Update On 2017-12-22 15:18 GMT
பெங்களூரு விமான நிலையத்தில் இன்று 11 கோடி ரூபாய் மதிப்பிலான 33 கிலோ தங்கம் பிடிபட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:

பெங்களூரு விமான நிலையத்தில் இன்று 11 கோடி ரூபாய் மதிப்பிலான 33 கிலோ தங்கம் பிடிபட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு விமான நிலையத்தில் சரக்கு பெட்டகங்களை இன்று ஆய்வு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 11 கோடி ரூபாய் மதிப்பிலான 33 கிலோ தங்கம் பிடிபட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பான தீவிர விசாரணை நடைபெற்று வருவதால் அந்த பெட்டகம் எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது? யாருக்காக அனுப்பி வைக்கப்பட்டது? என்ற விபரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
Tags:    

Similar News