செய்திகள்

இரண்டு நபருக்கு ஒரே பான் எண்: 10 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்த வினோதம்

Published On 2017-12-17 02:07 GMT   |   Update On 2017-12-17 02:07 GMT
பஞ்சாப் மாநிலத்தில் ஒரே மாதிரி பெயர், பிறந்த தினம் கொண்ட இருவருக்கு ஒரே பான் கார்டு எண் இருப்பதுடன், 10 ஆண்டுகளாக இருவரும் அதே எண்ணில் தங்களது கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் மஸ்துவானாவில் உள்ள கல்லூரியில் பியூனாக இருப்பவர் லச்மன் சிங், கடந்த 2003-ம் ஆண்டு தனக்கான பான் கார்டை பெற்றுள்ளார். 2006-ம் ஆண்டில் ராணுவ வீரரான லக்‌ஷ்மன் சிங் பான் கார்டு விண்ணப்பித்து பெற்றுள்ளார். ஆனால், இருவருக்கும் ஒரே எண் வழங்கப்பட்டுள்ளது.

இருவரின் தந்தை பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம் ஆகியவை ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் வருமான கணக்கை ஒரே எண்ணில் தாக்கல் செய்துள்ளனர். இருந்தும் அதிகாரிகளால் இதை கண்டுபிடிக்க முடியவில்லை.

வருமான வரி விதிமுறைகளின் படி ஒரே தனிப்பட்ட அடையாள எண்ணை வேறு யாருக்கும் வழங்க முடியாது. இருப்பினும், 10 ஆண்டுகளாக அவர்கள் தங்களது கணக்கை ஒரே எண் மூலமாக தாக்கல் செய்துள்ளனர். தற்போது, இவ்விவகாரம் வெளி வந்துள்ள நிலையில், லச்மன் சிங் வருமான வரி அலுவலகத்தில் முறையிட்டுள்ளார். ஆனாலும், அதிகாரிகள் சரியான விளக்கம் அளிக்கவில்லை.

ஊடகங்களில் இந்த பிரச்சனை வெளியான நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று சண்டிகர் வருமான வரித்துறை இணை இயக்குநர் ராஜ்தீப் சிங் கூறியுள்ளார். 
Tags:    

Similar News