செய்திகள்

இந்தியா-சீனா எல்லை அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

Published On 2017-12-10 23:56 GMT   |   Update On 2017-12-10 23:56 GMT
இந்தியா-சீனா எல்லை அருகில் லடாக் பகுதியில் நேற்று ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா-சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 10:58
மணிக்கு லே பகுதியில் இருந்து சுமார் 102 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பூமிக்கடியில் 15 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கம் இந்தியாவை ஒட்டியுள்ள சீன எல்லையிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என தெரிகிறது. இருப்பினும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
Tags:    

Similar News