செய்திகள்

ராஜஸ்தான்: அடுத்தடுத்து இஞ்சின் கோளாறு- ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய மிக்-21 போர் விமானம்

Published On 2017-12-08 21:45 GMT   |   Update On 2017-12-08 21:46 GMT
ராஜஸ்தானிலிருந்து மத்தியப்பிரதேசம் சென்று கொண்டிருந்த இந்திய போர் விமானம் கோளாறு காரணமாக ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானின் ஜைசல்மர் பகுதியிலிருந்து மத்தியப்பிரதேசம் குவாலியருக்கு விமானப்படையின் மிக்-21 பிசன் ரக போர் விமானம் நேற்று புறப்பட்டது. நடுவானில் பறக்கும்போது அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கானர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு அந்த விமானத்தில் ஏற்பட்ட பழுதுகள் சரிபார்க்கப்பட்டபின் விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது.

ஆனால் விமானத்தில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் அதே விமான நிலையத்தில் அவசரமாக மீண்டும் தரையிறக்கியது. இதன்காரணமாக அந்த ஓடுபாதை சுமார் அரை மணி நேரம் மூடப்பட்டதால், பிற விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.
Tags:    

Similar News