செய்திகள்

பீகார்: மது குடிக்க பணம் தராத தாயாரை அடித்துக் கொன்ற மகன்

Published On 2017-11-27 14:59 GMT   |   Update On 2017-11-27 14:59 GMT
பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் மது குடிக்க பணம் தராத தாயாரை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:

பீகார் மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. எனினும், பிறமாவட்ட எல்லைப் பகுதிகளில் மதுவின் நடமாட்டத்தை தடுக்க முடியவில்லை.

இந்நிலையில், இங்குள்ள வைஷாலி மாவட்டம், லால்போக்ரா கிராமத்தை சேர்ந்த தீபக் குமார் ராய்(35), மது குடிப்பதற்காக பணம் தருமாறு இன்று தனது தாயார் ஊர்மிளா தேவி(65) என்பவரிடம் தகராறு செய்துள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய தாயார் ஊர்மிளா தேவியை தீபக் குமார் சரமாரியாக தாக்கினார்.

இதில் ஊர்மிளா தேவி துடிதுடித்து உயிரிழந்தார். அங்கிருந்து தப்பியோட முயன்ற தீபக் குமாரை அக்கம்பக்கத்து வீட்டினர் பிடித்து ஒரு அறைக்குள் பூட்டி அடைத்து வைத்தனர். அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்துவந்த போலீசார்,  ஊர்மிளா தேவியின் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த படுகொலை தொடர்பாக தீபக் குமாரை கைது செய்து வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News