செய்திகள்

இரட்டை இலை விவகாரம்: எடப்பாடி, ஓ.பி.எஸ். தனித்தனியே கேவியட் மனு

Published On 2017-11-27 07:09 GMT   |   Update On 2017-11-27 07:09 GMT
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று தனித்தனியே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுடெல்லி:

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். அணிக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் வழங்கியது.

சின்னம் விவகாரத்தில் தினகரன் அப்பீல் செய்தால் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று ஓ.பி.எஸ். சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று தனித்தனியே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Tags:    

Similar News