செய்திகள்

ராஜஸ்தான்: வெடிபொருள்கள் நிறைந்த லாரியை மடக்கி பிடித்த போலீசார்

Published On 2017-11-25 14:38 GMT   |   Update On 2017-11-25 14:38 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் வெடிபொருள்கள் நிறைந்த லாரியை மடக்கிய போலீசார், அதுதொடர்பாக லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் டோல்பூர் பகுதியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை போலீசார் மடக்கிப் பிடித்தனர். சோதனை செய்ததில் லாரி முழுவதும் வெடி பொருள்கள் நிறைந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, லாரி டிரைவரை மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர். லாரியில் நிரப்பியுள்ள வெடிபொருள் எங்கு 
கொண்டு செல்லப்படுகிறது என்பது தொடர்பாக டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  
ரோந்து பணியில் ஈடுபட்டபோது வெடிபொருள் நிரப்பப்பட்ட லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News