செய்திகள்
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகர் அருகில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகர் அருகில் ரிக்டரில் அளவுகோளில் 4.2 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் மதியம் சுமார் 3:21 மணியளவில் ஏற்பட்டது. பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 4.2 ஆக பதிவானதாக இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் மேற்கு ராஜஸ்தான் பகுதியில் கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.