செய்திகள்

போனை ஒட்டு கேட்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கர்நாடக மந்திரி புகார்

Published On 2017-11-07 13:52 GMT   |   Update On 2017-11-07 13:52 GMT
கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி எம்.பி. பாட்டீல் போனை ஒட்டு கேட்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மீது புதிய குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.
பெங்களூரு:

கர்நாடக மின்சாரத்துறை மந்திரி டி.கே. சிவகுமார வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினார்கள். அவரது அலுவலகம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது.

நேற்று சிவகுமார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 12 பேரிடம் வருவாய் வரித்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு பதில் பெற்றனர்.

இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி எம்.பி. பாட்டீல் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது புதிய குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.

தனது போனையும் தனது குடும்ப உறுப்பினர்களின் போனையும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒட்டுக்கேட்டு பதிவு செய்வதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

அவரது குற்றச்சாட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பதில் எதுவும் கூறவில்லை.
Tags:    

Similar News