செய்திகள்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நவம்பர் 10-ம் தேதி ஒடிசா மாநிலம் செல்கிறார்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இரண்டு நாட்கள் பயணமாக வருகிற 10-ம் தேதி ஓடிசா மாநிலத்திற்கு செல்ல இருக்கிறார்.
புவனேஸ்வர்:
துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பொறுப்பெற்ற பின்னர் முதன்முறையாக வருகிற 10-ம் தேதி ஒடிசா மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
10-ம் தேதி புவனேஸ்வர் வரும் வெங்கையா நாயுடு, ஒடிசா கவர்னர் மாளிகையில் தங்குகிறார். அதன்பின் 11-ம் தேதி கலிங்கா தொழில்நுட்ப கல்லுரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். அதன் பின்னர் அன்று மாலையே டேல்லி திரும்புகிறார்.
துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்டக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த போலீஸ் ஆணையாளர் குரானியா இந்த தகவலை தெரிவித்தார்.