செய்திகள்

மத்தியப்பிரதேசம்: வேன் - கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

Published On 2017-10-13 12:38 GMT   |   Update On 2017-10-13 12:38 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கார் மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இன்று காலை வேன் ஆனது செய்தித்தாள்களை ஏற்றி கொண்டு சியோனிலிருந்து சிந்த்வாராவிற்கு சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், சிந்த்வாரா-ஜபால்பூர் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்டை சேர்ந்த ரவிதாஸ், சியோனியைச் சேர்ந்த சதீஷ் வர்மா மற்றும் சிந்த்வாராவைச் சேர்ந்த பிரகாஷ் சாகு ஆகிய மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News