செய்திகள்
தலைநகரில் உக்ரைன் நாட்டு தூதரின் செல்போன் திருட்டு
டெல்லி செங்கோட்டையை சுற்றிப்பார்க்கச் சென்ற உக்ரைன் நாட்டு தூதர் ஈகோர் போலிகாவின் செல்போன் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவுக்கான உக்ரைன் தூதராக இருப்பவர் ஈகோர் போலிகா. இவர் நேற்று டெல்லியில் உள்ள முக்கிய இடங்களை சுற்றிப்பார்க்கச் சென்றுள்ளார். அப்போது டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு சென்று அங்கு தனது செல்போனில் சில புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
அப்போது, புகைப்படம் எடுத்துகொண்டிருந்த போது அங்கிருந்த திருடன் ஒருவன் அவரது செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பிடிங்கிக்கொண்டு ஓடிவிட்டான். இதனையடுத்து அவர் அங்குள்ள போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் அவர் தகவல் அளித்துள்ளார்.
திருட்டு நடந்த சமயத்தில் அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் உடனில்லை. மேலும், அவரது ஓட்டுநரும் சிறிது தூரத்தில் இருந்த காருடன் காத்திருந்ததாகத் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கான உக்ரைன் தூதராக இருப்பவர் ஈகோர் போலிகா. இவர் நேற்று டெல்லியில் உள்ள முக்கிய இடங்களை சுற்றிப்பார்க்கச் சென்றுள்ளார். அப்போது டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு சென்று அங்கு தனது செல்போனில் சில புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
அப்போது, புகைப்படம் எடுத்துகொண்டிருந்த போது அங்கிருந்த திருடன் ஒருவன் அவரது செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பிடிங்கிக்கொண்டு ஓடிவிட்டான். இதனையடுத்து அவர் அங்குள்ள போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் அவர் தகவல் அளித்துள்ளார்.
திருட்டு நடந்த சமயத்தில் அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் உடனில்லை. மேலும், அவரது ஓட்டுநரும் சிறிது தூரத்தில் இருந்த காருடன் காத்திருந்ததாகத் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.