செய்திகள்
சிக்கிம்: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி
சிக்கிம் மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்ட வீடுகளில் சிக்கிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காங்டோக்:
சிக்கிம் மாநிலத்தின் தென்மாவட்டத்தில் உள்ள குர்பைஸி என்ற இடத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த ஒரு வீடு பூமிக்குள் புதைந்தது. இந்த இடிபாட்டில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
கிழக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள மேல் போக்குராங் பகுதியிலும் இன்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு சிறுமி மற்றும் அவரது தாயார் உயிரிழந்தனர்.
மாவட்ட நிர்வாகத்தினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்புப்படையின் உதவியுடன் மீட்டனர்.
சிக்கிம் மாநிலத்தின் தென்மாவட்டத்தில் உள்ள குர்பைஸி என்ற இடத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த ஒரு வீடு பூமிக்குள் புதைந்தது. இந்த இடிபாட்டில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
கிழக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள மேல் போக்குராங் பகுதியிலும் இன்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு சிறுமி மற்றும் அவரது தாயார் உயிரிழந்தனர்.
மாவட்ட நிர்வாகத்தினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்புப்படையின் உதவியுடன் மீட்டனர்.