செய்திகள்
உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு: பொதுமக்கள் பாதிப்பு
உத்தரகாண்ட மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
டேராடூன்:
இமைய மலையை ஒட்டிய மாநிலமான உத்தரகாண்ட்டில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. உத்தர்காசி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை உத்தர்காசி பகுதிகளில் உள்ள மலைக்குன்றுகளில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் பெரும்பாலும் மலைப்பாங்கான பிரதேசம் என்பதால் நிலச்சரிவு அடிக்கடி நடைபெறுகிறது. சில மாதங்களுக்கு இதேபோல் நிகழ்ந்த நிலச்சரிவு விபத்தில் பலர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இமைய மலையை ஒட்டிய மாநிலமான உத்தரகாண்ட்டில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. உத்தர்காசி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை உத்தர்காசி பகுதிகளில் உள்ள மலைக்குன்றுகளில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் பெரும்பாலும் மலைப்பாங்கான பிரதேசம் என்பதால் நிலச்சரிவு அடிக்கடி நடைபெறுகிறது. சில மாதங்களுக்கு இதேபோல் நிகழ்ந்த நிலச்சரிவு விபத்தில் பலர் பலியானது குறிப்பிடத்தக்கது.