செய்திகள்

மணிப்பூர் மாநில முன்னாள் முதல்வர் ரிஷாங் கெய்ஷிங் காலமானார்

Published On 2017-08-22 18:10 GMT   |   Update On 2017-08-22 18:10 GMT
மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 4 முறை முதல்வராக இருந்த ரிஷாங் கெய்ஷிங் (96) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 4 முறை முதல்வராக இருந்த ரிஷாங் கெய்ஷிங் (96) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

மணிப்பூர் மாநிலத்தில் உக்ருல் மாவட்டத்தில் 1920-ம் ஆண்டு பிறந்த ரிஷாங் கெய்ஷிங் அம்மாநிலத்தில் இருந்து முதன் முதலாக நாடாளுமன்றத்திற்குள் சென்ற பிரதிநிதி என்ற பெயரை பெற்றவர். காங்கிரஸ் கட்சி சார்பில் அம்மாநிலத்தில் 1980-ம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற அவர் நான்கு முறை முதல்வராக பதவி வகித்துள்ளார்.

முதல்வராக பணியாற்றிய பின்னரும் கடந்த 2002-ம் ஆண்டில் ராஜ்யசபாவுக்கும் தேர்வு செய்யப்பட்டார். 2014-ம் ஆண்டில் அவரது பதவிக்காலம் முடிவுற்ற பின்னர் அரசியல் வாழ்விலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார்.

ரிஷாங் கெய்ஷிங் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News