என் மலர்
நீங்கள் தேடியது "manipur"
- இம்பாலில் இருந்து பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு வாகனத்தில் செல்லும்போது தாக்குதல்.
- காயம் அடைந்த மூன்று வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் ஆயுதமேந்திய குழு அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு வீரர் உயிரிழந்த நிலையில், 3 பேர் காயம் அடைந்தனர்.
வீரர்கள் இம்பாலில் இருநது பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆயுதமேந்திய ஒரு கும்பல் திடீரென வானத்தின் மீது தாக்கதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் மாலை 6 மணிக்கு நம்போல் சபால் லெய்கை என்ற இடத்தில் நடந்துள்ளது. இதில் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயம் அடைந்த வீரர்கள் போலீஸ் மற்றும் பொதுமக்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட சண்டை, வன்முறையாக வெடித்தது. இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் மணிப்பூரில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. மணிப்பூர் கலவரத்திற்குப் பிறகு கடந்த வாரம் முதன்முறையாக பிரதமர் மோடி, அம்மாநிலத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.
- இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றார்.
- மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள மோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.
வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் செல்ல தயக்கம் காட்டுவது ஏன்? என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன.
இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், மணிப்பூரில் பிரதமர் மோடியின் கட்அவுட்டை சேதப்படுத்தியதாக 2 இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சூரசந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையுடன் பயங்கர மோதலில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் அதிகரித்ததால் இரு இளைஞர்களும் விடுவிக்கப்பட்டனர். இளைஞர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் நிலைமை சீரானதாக போலீசார் விளக்கம் அளித்தனர்.
- சூரசந்த்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
- கனமழையால் சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்யப்பட்டது.
பிரதமர் மோடி இன்று மணிப்பூர் மாநிலம் சென்றார். டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து சூரசந்த்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கனமழை பெய்த காரணத்தால் ஹெலிகாப்டரில் செல்வது பாதுகாப்பானது அல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், சூரசந்த்பூரில் மக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என பிரதமர் மோடி திட்டவட்டாக தெரிவித்துள்ளார். இதனால் சாலை வழியாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது. அதேவேளையில் சாலை வழியாக சென்றால் ஒன்றரை மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எத்தனை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனால் சாலை வழியாக பிரதமர் மோடி சூரசந்த்பூர் சென்றார். அவருக்கு சாலையின் இரு பக்கமும் மக்கள் அதிக அளவில் திரண்டு வரவேற்று அளித்தனர். மேலும், பேரணி நடைபெற்ற இடத்திலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில் "மணிப்பூர் மக்களின் உறுதிக்கு சல்யூட். கனமழை பெய்த போதிலும் கூட, மிகப்பெரிய அளவில் திரண்டு வந்துள்ளனர். உங்களுடைய அன்புக்காக உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஹெலிகாப்டர் கனமழை காரணமாக இங்கு வர முடியவில்லை. இதனால் நான் சாலை மார்க்கமாக வர முடிவு செய்துள்ளேன். இன்று சாலையில் நான் கண்ட காட்சிகளைப் பார்க்கும்போது, ஹெலிகாப்டர் மூலம் இல்லாமல், நான் சாலை வழியாக வந்தது நல்லது என்று என் மனம் சொல்கிறது.
வழியெங்கும் மூவர்ணக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி அனைவரும் எனக்கு அன்பும் பாசமும் அளித்த இந்த தருணத்தை என் வாழ்வில் ஒருபோதும் மறக்க முடியாது. மணிப்பூர் மக்களுக்கு நான் தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில், மணிப்பூரின் வீர மகன்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
- மணிப்பூரை அமைதி, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
* 21 ஆம் நூற்றாண்டு வடகிழக்குக்கு சொந்தமானது.
* வாய்ப்புகளின் நகரம் இம்பால். இந்தியாவின் வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்தும் இடங்களில் ஒன்றாக இதைப் பார்க்கிறேன்
* மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் மணிப்பூர் பெண்கள் முன்னணியில் உள்ளனர்
* மணிப்பூரில் எந்த வகையான வன்முறையும் துரதிர்ஷ்டவசமானது
* மணிப்பூரை அமைதி, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்
* ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில், மணிப்பூரின் வீர மகன்கள் முக்கிய பங்கு வகித்தனர்
* நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றதற்கு சுஷிலா கார்கிக்கு வாழ்த்துகள். இது பெண்கள் அதிகாரமளிப்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
* மணிப்பூரில் வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அசு பல திட்டங்களில் செயல்படுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- வன்முறை துரதிர்ஷ்டவசமானது, இடம்பெயர்ந்த மக்களிடம் பேசினேன், மணிப்பூர் புதிய விடியலை நோக்கிப் பார்க்கிறது என்று சொல்லலாம்.
- மத்திய அரசின் அமைதிக்கான தொடர்ச்சியான முயற்சிகள் மலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்கு குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தன.
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் செல்ல தயக்கம் காட்டுவது ஏன்? என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன.
இந்த நிலையில் 8500 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மற்றும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கான இன்று மணிப்பூர் சென்றார். சூரசந்த்பூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
* மணிப்பூர் வீர் நிறைந்த பூமி.
* இம்பாலில் இருந்து சாலை வழியாக சூரசந்த்பூருக்குச் செல்லும் வழியில் எனக்குக் கிடைத்த அன்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
* இன்று திறக்கப்பட்ட திட்டங்கள் மணிப்பூரில் உள்கட்டமைப்பு, சுகாதாரம் அடிப்படையில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.
* 2014 முதல், மணிப்பூரில் இணைப்பை மேம்படுத்துவதற்கு நான் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.
* இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். வளர்ச்சியின் பலன்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைவதை உறுதி செய்ய விரும்புகிறோம்.
* மணிப்பூரில் ரெயில்வே, சாலை இணைப்பு திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது:
* வளர்ச்சிக்கு அமைதி மிக முக்கியம்
* உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில் செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
* வன்முறை துரதிர்ஷ்டவசமானது, இடம்பெயர்ந்த மக்களிடம் பேசினேன், மணிப்பூர் புதிய விடியலை நோக்கிப் பார்க்கிறது என்று சொல்லலாம்.
* மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம். நான் இந்த மாநில மக்களுடன் இருக்கிறேன்.
* மத்திய அரசின் அமைதிக்கான தொடர்ச்சியான முயற்சிகள் மலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்கு குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தன.
* முன்னதாக, டெல்லியில் எடுக்கப்பட்ட முடிவுகள் மணிப்பூரை எட்ட பல தசாப்தங்கள் ஆனது, ஆனால் இப்போது மணிப்பூர் நாட்டின் மற்ற பகுதிகளுடன் சேர்ந்து முன்னேறி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- பலமுறை பாராளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசிய பின்பும் போகவில்லை.
- வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்ட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதன் முதலில் கம்ப்யூட்டர் தொடர்பான பாலிசியை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மேலும் ஐ.டி. பாலிசியை கொண்டு வந்தார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள துணை ஜனாதிபதிக்கு ஏற்கனவே வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளோம். அவர் நடுநிலையோடு சிறப்பாக செயல்பட வேண்டும். ஜனநாயகத்தை காப்பவராக குறிப்பாக தமிழ்நாடு உரிமைகளை ஜனநாயகத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர் சிறப்பாக செயல்பட வேண்டுமென வாழ்த்துகிறேன்.
கூட்டணி பற்றி பேசுவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அவருடைய கட்சி உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது அவருக்கு பாதுகாப்பாக இருக்கும்.
மணிப்பூரில் 2027-இல் தேர்தல் வருகிறது. அது பிரதமருக்கு மணிப்பூரை நினைவுபடுத்துகிறது. பலமுறை பாராளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசிய பின்பும் போகவில்லை. இப்பொழுது தேர்தல் வர இருப்பதால் பிரதமர் மணிப்பூர் செல்கிறார்.
வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி மணிப்பூர் சென்றுள்ளார்.
- மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இங்கிருந்து சாலை மார்க்கமாக சூரசந்த்பூருக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றுள்ளார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்வதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவை பகிர்ந்து திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.
அவரது பதிவில், "இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருந்த போதிலும், இந்தியப் பிரதமர் இறுதியாக மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்துள்ளார் என்பதை நான் கவனிக்கிறேன். இரக்கம் வெளிப்படையாகத் தோல்வியடைந்துள்ளது, ஆனால் 2027 தேர்தல் ஏற்பாடுகள் அவருக்கு மணிப்பூரை நினைவூட்டுவதில் வெற்றி பெற்றுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.
- மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இனக்கலவரம் நடந்தது.
- மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். மிசோரம் தலைநகரான ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இங்கிருந்து சாலை மார்க்கமாக சூரசந்த்பூருக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றுள்ளார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மணிப்பூர் கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி செல்வதால் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
- மிசோரம் தலைநகர் முதல் முறையாக இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
- பைராபி-சாய்ராங் புதிய ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
வடகிழக்கு மாநிலமான மிசோரமிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். மிசோரம் தலைநகரான ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மிசோரம் தலைநகரை முதல் முறையாக இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கும் ரூ.8,070 கோடிக்கு மேல் மதிப்புள்ள பைராபி-சாய்ராங் புதிய ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதனையடுத்து, மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் செல்கிறார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மணிப்பூர் கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி செல்வதால் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
- இடைப்பட்ட காலத்தில் 13க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணங்களை மோடி மேற்கொண்டார்.
- பாஜக உறுப்பினர்கள் 43 பேர் நேற்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
மணிப்பூரில் மே 2023 இல் குக்கி, மெய்தேய் சமூக மக்கள் இடையே பழங்குடியின அந்தஸ்து பெறுவது தொடர்பாக இனக்கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாயினர்.
இரு சமூகங்களை சேர்ந்த ஆயுத குழுக்களால் இன்னும் மணிப்பூரில் பதற்றம் தணிந்தபாடில்லை. கடந்த பிப்ரவரியில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.
கலவரம் நடந்து 2 வருடங்கள் ஆகியும் பிரதமர் மோடி ஒருமுறை கூட மணிப்பூர் செல்லாததை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. குறிப்பாக இந்த இடைப்பட்ட காலத்தில் 13க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணங்களை மோடி மேற்கொண்ட போதும் சொந்த நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு பிரதமர் செல்லாதது கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் கலவரத்தின் பின் முதல் முறைக்காக பிரதமர் மோடி நாளை (செப்டம்பர் 13) மணிப்பூர் செல்ல உள்ளார்.
குக்கிகள் பெரும்பான்மையாக வசிக்கும் சூரசந்த்பூரில், ரூ.7,300 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.
மெய்தேய் ஆதிக்கம் செலுத்தும் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில், ரூ.1,200 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னதாக மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தின் ஃபுங்யார் மண்டல பாஜக உறுப்பினர்கள் 43 பேர் நேற்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
"கட்சியின் தற்போதைய நிலை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். ஆலோசனை இல்லாமை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை இல்லாமை மற்றும் அடிமட்டத் தலைமைக்கு மரியாதை இல்லாதது ஆகியவை எங்கள் முடிவுக்கு முக்கிய காரணங்கள்" என்று ராஜினாமா செய்த உறுப்பினர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.
- மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
- மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி மெய்தி- குகி ஆகிய இரண்டு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு பின்னர் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே கலவரத்தால் பெருதும் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஒருமுறை செல்லாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
உலகம் முழுவதும் பயணம் செய்யும் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் மாநிலத்தைப் பார்வையிட்டு அங்குள்ள மக்களைச் பார்க்க நேரமோ, ஆர்வமோ இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், வரும் செப்டம்பர் 2ம் வாரத்தில் பிரதமர் மோடி அங்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவதுடன், பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் என கூறப்படுகிறது.
- மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
- மேலும் 6 மாதத்துக்கு அங்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
புதுடெல்லி:
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு பாராளுமன்றம் ஏப்ரல் 2-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதலுக்கான காலக்கெடு ஆகஸ்டு 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதற்கிடையே, 6 மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, கடந்த வாரம் மக்களவையிலும், நேற்று மாநிலங்களவையிலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூரில் மேலும் 6 மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்தது.
மணிப்பூர் மாநிலத்தில் முழுமையாக அமைதி திரும்பி இருக்கிறது. நிரந்தர அமைதியை ஏற்படுத்த இனக்குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து வருகிறது.






