செய்திகள்

டெல்லி புறநகரில் இளம்பெண்ணை கற்பழித்து 4-வது மாடியில் இருந்து வீச்சு: காதலன் வெறிச்செயல்

Published On 2017-08-14 07:43 GMT   |   Update On 2017-08-14 07:43 GMT
டெல்லி புறநகரில் இளம்பெண்ணை கற்பழித்து 4-வது மாடியில் இருந்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:

டெல்லி புறநகரான பெகும்பரில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

இந்த கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து 20 வயது இளம்பெண் ஒருவர் வெளியே வீசப்பட்டார்.

இதில் அந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உயிருக்காக அவர் போராடி வருகிறார்.

போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணை அவரது காதலன் கற்பழித்து அந்த கட்டிடத்தில் இருந்து வீசியது தெரிய வந்தது. ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

இளம்பெண் கற்பழித்து மாடியில் இருந்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக காதலன் தீபக்கை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News