செய்திகள்
ராஜஸ்தான்: போலீஸ் வேன் மீது கார் மோதிய விபத்தில் 2 வயது குழந்தையுடன் மாஜிஸ்திரேட் பலி
ராஜஸ்தான் மாநிலம் லக்ஷ்மன்கர் பகுதியில் காரும் போலீஸ் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மாவட்ட மாஜிஸ்திரேட்டும் அவரது 2 வயது மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருக்கும் ராஜ்தீப் கவுர், தனது கணவர் ராஜ்தீப் சிங் மற்றும் 2 வயது மகள் நம்ரதா ஆகியோருடன் சுருவில் இருந்து ஜெய்ப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
இன்று காலை ஜெய்ப்பூர் - பிகானீர் நெடுஞ்சாலையில் உள்ள லக்ஷ்மன்கர் பகுதி அருகில் அவர்களின் கார் வந்து கொண்டிருந்த போது, திடீரென எதிரே வந்த போலீஸ் வேன் மீது கார் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் மாஜிஸ்திரேட் ராஜ்தீப் கவுர் மற்றும் அவரது மகள் நம்ரதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். படுகாயம் அடைந்த ராஜதீப் சிங் மற்றும் நான்கு போலீசாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்துள்ள லக்ஷ்மன்கர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருக்கும் ராஜ்தீப் கவுர், தனது கணவர் ராஜ்தீப் சிங் மற்றும் 2 வயது மகள் நம்ரதா ஆகியோருடன் சுருவில் இருந்து ஜெய்ப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
இன்று காலை ஜெய்ப்பூர் - பிகானீர் நெடுஞ்சாலையில் உள்ள லக்ஷ்மன்கர் பகுதி அருகில் அவர்களின் கார் வந்து கொண்டிருந்த போது, திடீரென எதிரே வந்த போலீஸ் வேன் மீது கார் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் மாஜிஸ்திரேட் ராஜ்தீப் கவுர் மற்றும் அவரது மகள் நம்ரதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். படுகாயம் அடைந்த ராஜதீப் சிங் மற்றும் நான்கு போலீசாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்துள்ள லக்ஷ்மன்கர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.