செய்திகள்
உத்தரகாண்ட் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு
உத்தரகாண்ட் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இமயமலையில் உள்ள கங்கோத்ரி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு ஊருக்கு பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த பஸ் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள நலுபானி அருகே வந்தபோது பாகீரதி ஆற்றில் விழுந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 24 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் நேற்று மாலை நடந்தது. இதற்கிடையே இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவியை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். விபத்தில் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இமயமலையில் உள்ள கங்கோத்ரி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு ஊருக்கு பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த பஸ் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள நலுபானி அருகே வந்தபோது பாகீரதி ஆற்றில் விழுந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 24 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் நேற்று மாலை நடந்தது. இதற்கிடையே இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவியை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். விபத்தில் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.