செய்திகள்
திருவனந்தபுரம் அருகே ரெயில் மோதி குழந்தை - 2 பெண்கள் பலி
திருவனந்தபுரம் அருகே தண்டவாளத்தை கடந்த போது ரெயில் வருவதை கவனிக்காததால் விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர்.
திருவனந்தபுரம்:
நாகர்கோவிலில் இருந்து மங்களூர் செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம் போல இங்கிருந்து புறப்பட்டு சென்றது.
அந்த ரெயில் திருவனந்தபுரம் அருகே தலச்சேரி என்ற இடத்தில் அதிகாலை 5.30 மணி அளவில் சென்றபோது தண்டவாளத்தை கடந்த 2 பெண்கள், ஒரு குழந்தை மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தலச்சேரி ரெயில்வே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பலியானவர்கள் திருவனந்தபுரம் அருகே உள்ள மணக்காடு பகுதியை சேர்ந்த நசிமா (வயது 50), அவரது தங்கை சுபைதா (40), நசிமாவின் பேரன் ஐகான் (2) என்பது தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் புனலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் தலச்சேரி ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் வருவதை கவனிக்காததால் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். அவர்கள் உடலை கைப்பற்றிய போலீசார் தலச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
நாகர்கோவிலில் இருந்து மங்களூர் செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம் போல இங்கிருந்து புறப்பட்டு சென்றது.
அந்த ரெயில் திருவனந்தபுரம் அருகே தலச்சேரி என்ற இடத்தில் அதிகாலை 5.30 மணி அளவில் சென்றபோது தண்டவாளத்தை கடந்த 2 பெண்கள், ஒரு குழந்தை மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தலச்சேரி ரெயில்வே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பலியானவர்கள் திருவனந்தபுரம் அருகே உள்ள மணக்காடு பகுதியை சேர்ந்த நசிமா (வயது 50), அவரது தங்கை சுபைதா (40), நசிமாவின் பேரன் ஐகான் (2) என்பது தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் புனலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் தலச்சேரி ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் வருவதை கவனிக்காததால் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். அவர்கள் உடலை கைப்பற்றிய போலீசார் தலச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.