உள்ளூர் செய்திகள்

வள்ளியூரில் ஏணியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

Published On 2022-09-18 09:15 GMT   |   Update On 2022-09-18 09:15 GMT
  • வள்ளியூரை அடுத்த தெற்கு வள்ளியூர் அம்மன்கோவில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவரது மகன் முருகன்(வயது 29).
  • இவர் நேற்று வள்ளியூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மெட்டல் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

நெல்லை:

வள்ளியூரை அடுத்த தெற்கு வள்ளியூர் அம்மன்கோவில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவரது மகன் முருகன்(வயது 29).

இவர் நேற்று வள்ளியூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மெட்டல் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் அங்கு ஏணியில் ஏறி வேலை பார்த்தபோது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.உடனே அவரை சக தொழிலாளர்கள் மீட்டு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிறிது நேரத்திலேயே முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வள்ளியூர் போலீ–சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News