உள்ளூர் செய்திகள்

மேலப்பாளையத்தில் வாகன சோதனையில் அரிவாளுடன் சிக்கிய வாலிபரால் பரபரப்பு

Published On 2022-08-17 09:31 GMT   |   Update On 2022-08-17 09:31 GMT
  • மேலப்பாளையம் சிக்னல் அருகே நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
  • அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரது மோட்டார் சைக்கிளில் நீளமான அரிவாள் ஒன்று இருந்தது.

நெல்லை:

மேலப்பாளையம் சிக்னல் அருகே நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரது மோட்டார் சைக்கிளில் நீளமான அரிவாள் ஒன்று இருந்தது.

அவரை பாளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு என்பதும், தற்போது நாகர்கோவிலில் அவர் வசித்து வருவதும், தனது சக தொழிலாளர்கள் சுமார் 10 பேருடன் தேங்காய் பறிக்கும் பணிக்காக வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அவர் மது போதையில் இருந்ததால் போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மீண்டும் இன்று காலை அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து முழுமையான விசாரணைக்கு பின்னர் அனுப்பி வைத்தனர். இரவில் அரிவாளுடன் போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News