உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2022-08-27 09:10 GMT   |   Update On 2022-08-27 09:10 GMT
  • நாங்குநேரியை அடுத்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள மாயநேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் கண்ணன் (வயது 27).
  • பெருமாள்கண்ணன் தவணை முறையில் டிராக்டர் வாங்கியதாகவும், அதற்கான தவணையை கட்ட முடியாமல் தவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

நெல்லை:

நாங்குநேரியை அடுத்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள மாயநேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் கண்ணன் (வயது 27).

இவர் கடந்த 24-ந் தேதி விஷம் குடித்த நிலையில் அப்பகுதியில் மயங்கி கிடந்தார்.

அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெருமாள்கண்ணன் தவணை முறையில் டிராக்டர் வாங்கியதாகவும், அதற்கான தவணையை கட்ட முடியாமல் தவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News