உள்ளூர் செய்திகள்
- பழையபேட்டை சமூகரெங்கன் கட்டளையை சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மகள் இசக்கியம்மாள் (வயது19).
- பாளையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
நெல்லை:
பழையபேட்டை சமூகரெங்கன் கட்டளையை சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மகள் இசக்கியம்மாள் (வயது19). இவர் பாளையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 25-ந்தேதி வழக்கம்போல ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார். ஆனால் இரவில் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. ஓட்டலில் இருந்து பணி முடிந்து ெசன்றுவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கியம்மாள் எங்கு சென்றார்? என விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.