உள்ளூர் செய்திகள்
பேட்டையில் கால்நடை விழிப்புணர்வு முகாம்
- விவசாயிகளுக்கான கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் கொண்டாளவளவு சமுதாய நல கூடத்தில் நடந்தது.
- கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சத்துள்ள தினை மாவு வழங்கினர்.
நெல்லை :
பேட்டை ரூரல் ஊராட்சிக்குட்பட்ட கொண்டாளவளவு சமுதாய நல கூடத்தில் விவசாயிகளுக்கான கால்நடை பராமரிப்பு வழிகாட்டுதல் பயிற்சி 2022-2023 ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இம்முகாமில் கால்நடைகளை பராமரிப்பதும், வளர்ப்பதும் குறித்தும் மருத்துவர்கள் பேசினர். பின்பு கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சத்துள்ள தினை மாவு வழங்கினர். நிகழ்ச்சியில் கால்நடை உதவி மருத்துவர்கள் ரேவதி, அனுபாமா, ஆய்வாளர்கள் மணிகண்டன், ஹரிநாராயணன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுப்பிரமணியன்மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.