உள்ளூர் செய்திகள்

 கருப்பசாமி கோவில் திருவிளக்கு பூஜை நடந்த போது எடுத்த படம்.

தூத்துக்குடி சண்முகபுரம் கருப்பசாமி கோவில் திருவிளக்கு பூஜை

Published On 2022-08-10 08:46 GMT   |   Update On 2022-08-10 08:46 GMT
  • தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட, பத்திரகாளியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட, பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது
  • இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 65 பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

தூத்துக்குடி:

தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட, பத்திரகாளியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட, பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மழை வளம், நாட்டின் ஒற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகியவற்றிற்கான சிறப்பு பஜனை வேண்டுதலுடன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 65 பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News