உள்ளூர் செய்திகள்

விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை

Published On 2022-07-23 09:37 GMT   |   Update On 2022-07-23 09:37 GMT
  • வீட்டை பூட்டி விட்டு ஆடுகளை மேய்ப்பதற்காக சந்திரசேகர் பக்கத்து தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.
  • வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

திருச்சி :

தா.பேட்டை அடுத்த மகாதேவி வயலூர் பகுதி சேர்ந்தவர் சந்திரசேகர் (60). இவரது மனைவி ருக்மணி விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். சம்பவதன்று வழக்கம்போல் ருக்மணி வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டை பூட்டி விட்டு ஆடுகளை மேய்ப்பதற்காக சந்திரசேகர் பக்கத்து தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.

வேலை முடிந்து சந்திரசேகர் வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் பணம் ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து சந்திரசேகர்தா.பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தபுகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News