உள்ளூர் செய்திகள்

மனவிரக்தியில் வாலிபர் தற்கொலை

Published On 2023-06-02 07:38 GMT   |   Update On 2023-06-02 07:38 GMT
  • மனவிரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
  • இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி உறையூர் லிங்க நகர் மேற்கு 4-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் முத்துக்குமரன் (வயது 38). இவர் மறுவாழ்வு மையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒன்றரை வருட காலமாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட முத்துக்குமரன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News