உள்ளூர் செய்திகள்

மண்ணச்சநல்லூரில் பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை அகற்ற கோரிக்கை

Published On 2022-08-03 09:33 GMT   |   Update On 2022-08-03 09:33 GMT
  • தற்போது அந்த கட்டிடம் மிகவும்பழுதடைந்த நிலையில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
  • மேலும் மழைக்காலங்களில் இந்த சுவரில் மழைநீர் கசிந்து வருகிறது.

திருச்சி :

மண்ணச்சநல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. இதன் அருகில் அங்கன்வாடி மையம் செயல்பட்டுவருகிறது. இதில் 5வயதுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்கட்டப்பட்டுள்ளது.

தற்போது அந்த கட்டிடம் மிகவும்பழுதடைந்த நிலையில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் இந்த சுவரில் மழைநீர் கசிந்து வருகிறது.

எனவே அந்த அங்கன் வாடி மைய கட்டித்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட ஆவண செய்யவேண்டும் என பள்ளி மேலாண்மை குழு தலைவர் அன்புராஜ் தலைமையில் நடைபெற்ற மேலாண்மை வளர்ச்சி குழு கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பள்ளிக்கு போதுமான குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி இல்லை. எனவே அவற்றையும்அமைத்து கொடுக்கவேண்டும் என பள்ளி மேலாண்மைகுழு உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News