திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
- திருச்சி பொன்மலையில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கஞ்சா விற்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி :
திருச்சி பொன்மலை புதிய டீசல் காலனி பகுதியை சேர்ந்தவர் சார்லி நெவில் (வயது31). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவர் பொன்மலைப்பட்டி பஜார் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே நடந்து சென்ற போது அங்கு வந்த பொன்மலைப்பட்டி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்கிற மிட்டாய் மணி(வயது22),பொன்மலை ராஜிவ்காந்திநகர் பகுதியில் சேர்ந்த பிரசாந்த்(25) ஆகிய இருவரும் சார்லியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர்
இது குறித்து சார்லி பொன்மலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், பிரசாந்த் ஆகியோரை கைது செய்தனர்.
திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைaடுத்து எடமலைப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்த மூர்த்தி(வயது42) கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போன்று மேல சிந்தாமணி பகுதியில் கஞ்சா விற்ற ஜாகிர் உசேன் (வயது45) என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். எடமலைப்பட்டி புதூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ரகுமான்(வயது45) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.