உள்ளூர் செய்திகள்

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் உட்பட 2 பேர் கைது

Published On 2022-10-07 10:08 GMT   |   Update On 2022-10-07 10:08 GMT
  • திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக எடமலைப்பட்டி புதூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது
  • ரோந்து பணியின் போது கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கவிதா (48) என்பவரை கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக எடமலைப்பட்டி புதூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கவிதா (48) என்பவரை கைது செய்ததோடு அவரிடமிருந்து 1200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

அதேபோல் எடமலை பட்டுக்கோட்டை எடமலை முருகன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் எடமலைப்பட்டி புதூர் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் சரவணன் (42) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

Tags:    

Similar News