உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமானும், நந்தியும்.

வெள்ளகோவில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

Published On 2023-06-16 08:01 GMT   |   Update On 2023-06-16 08:01 GMT
  • சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் ஆகியவற்றை கொண்டு் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News